புகுத்தறிவு
அறிவைப் புகுத்து, பின் பகுத்து .
rss
email
twitter
facebook
  • Home
  • படங்கள்
  • வீடியோ
  • கேள்விகள்
  • கவிதைகள்
  • இயற்கை மருத்துவங்கள்
  • மரங்கள்
  • உடற்பயிற்சிகள்
  • பாடல்கள்
  • செய்திகள்
இறைவன் இயற்கை வடிவில் இருக்கிறான்.

Archive for ‘Jun 3, 2011’

இயற்கை


இயற்கை;
இறைவன் மறைந்து கொடுத்த கொடை;
இயற்கை;
தமிழரின் கடவுள் பற்றிற்கான விடை;
விடையின் விளக்கம் சொல்கிறேன்
சற்று காது கொடுப்பீர்களா???!!!
வெளிச்சம் தந்ததால் இயற்கை
சூரியக் கடவுளானது;
தண்ணீரின் உயிர்ப்பினால் இயற்கை
மழைதேவன்.. கடல்தேவியானது;
பூமியின் இருப்பினால் விளைச்சளால்
இயற்கை; பூமித் தாயானது;
காற்றின் சுவாசத்தால் இயற்கை
வாயுதேவன் ஆனது;
பணத்தின் ஆளுமையால் மரம் கூட
பணமும்; பணம் கூட லட்சுமியும் ஆனது;
படிக்கும் படிப்பு; அறிவு; பகிர்தல்; கற்பித்தல்
கலை கூட கலைவாணி ஆனது;
வாழவைத்த இயற்கைக்கு
வாஞ்சையாக நன்றி சொன்னால்
கேடுகளும் தீருமென நம்பினோம்; நம்பிக்கை பக்தியானது;
மரங்களின் பலனால்
மண்ணின் உடைமையால்
கற்களின்  உரசலால், மறைப்பினால்,
இயற்கை; மரத்திலும், மண்ணிலும், கல்லிலும்,
நெருப்பிலும் கூட கடவுளானது!
இவ்வளவு ஏன் -
இயற்கைக்கு நன்றி சொல்ல
எழுதுகோல் எடுத்தேன் -
என் எழுத்து கூட கவிதையானது!!
ஆயினும்,
கடவுளை போற்ற மதத்தை படைத்து
மதத்தின் பேரில் மதம் கொண்டோம்;
கடைசியில் -
கடவுள் பேராலேயே
இன்று மனிதம் அழிகிறது.
மனிதனிலிருந்து விலங்குவரை
அழிக்கப் படுகின்றன;
அழிவை திருத்தி
மனிதன் உயிர்களை காக்க; மனிதம் காப்போம்
இயற்கையை -
வெறியின்றி வணங்குவோம்
வெறியில்லா மனிதத்தில்;
தெய்வீகம் இயற்கையாகவே பிறக்கும்.

நன்றி :  http://www.vithyasaagar.com



Newer Entries »

முத்தமிழ் இறைவன் முருகனுக்கு என் முதற்கண் வணக்கங்கள் .
  • Home
  • படங்கள்
  • வீடியோ
  • கேள்விகள்
  • கவிதைகள்
  • இயற்கை மருத்துவங்கள்
  • மரங்கள்
  • உடற்பயிற்சிகள்
  • பாடல்கள்
  • செய்திகள்

Archives

  • ▼  2011 (1)
    • ▼  June (1)
      • ▼  Jun 03 (1)
        • இயற்கை



Clicking here


Subscribe via Email

Powered by Blogger | Designed by WebTreats
Blogger Templates for WP 2 Blogger sponsored by Cinta