தாய் மடி சூடு தாங்காமல் சேய் கூட அழுதிடும் !
இந்த பூமிப்பந்து கனல் சூடு தாங்காமல் அழிந்திடுவளோ !!
தீயின் நாவில் தீமைஅழியட்டும் !
வெப்பத்தின் சாவில்மனிதன் வாழட்டும் !!
"தமிழ் இனி மெல்ல சாகும்" - இது பாரதியின் வாக்கு !
மனித அலட்சியத்தால்
"புவி இனி மெல்ல சாகும்" - இது
என்னுடைய வாக்கு !!
பனிப்பொழிவால் ஆடை உடுத்தி அழகு நங்கை வாழ்ந்து வந்தாள்என்
அன்னை - அவள் வெப்பமெனும் துட்சாதனன்
சிறுக சிறுக பனிப்போர்வையை துகிலுரிக்க கண்டேன்!
நம்தாய் நிர்வாணம்அடையுமுன்னே - போர்வை ஒன்றை தந்திடுவோம்!!
பச்சைபசேல் என சேலை ஒன்றைநெய்திடுவோம்!!
"மரக்கன்று" - இது நம் மானம் காக்கும் ஆடை அன்றோ !
"மரக்கன்று" - இதுநாம் வாழும் வாழ்வின் அடையாளமன்றோ !!
இந்த பூமிப்பந்தை தாய் போல் காத்திடுவோம்!
வரப்பு சண்டை வாய்க்கால் சண்டை எல்லையில் சண்டை - என
வறட்டு சண்டை போதும் !! ஒன்றுபட்டு
ஒழித்துடுவோம் - புது வழியை நாமும் கண்டிடுவோம்!
பச்சை ஆடை உடுத்திட பலப்பல மரக்கன்று நடவேண்டும் !
மரம் வெட்டும் மனிதனைபல மாதம் பாலை மணலில் விட வேண்டும் !!
மரச்சோலை எங்கும் வரவேண்டும் !
மரம் சாலை எங்கும் நடவேண்டும் !!
சிறுக சிறுக பனிப்போர்வையை துகிலுரிக்க கண்டேன்!
நம்தாய் நிர்வாணம்அடையுமுன்னே - போர்வை ஒன்றை தந்திடுவோம்!!
பச்சைபசேல் என சேலை ஒன்றைநெய்திடுவோம்!!
"மரக்கன்று" - இது நம் மானம் காக்கும் ஆடை அன்றோ !
"மரக்கன்று" - இதுநாம் வாழும் வாழ்வின் அடையாளமன்றோ !!
இந்த பூமிப்பந்தை தாய் போல் காத்திடுவோம்!
வரப்பு சண்டை வாய்க்கால் சண்டை எல்லையில் சண்டை - என
வறட்டு சண்டை போதும் !! ஒன்றுபட்டு
ஒழித்துடுவோம் - புது வழியை நாமும் கண்டிடுவோம்!
பச்சை ஆடை உடுத்திட பலப்பல மரக்கன்று நடவேண்டும் !
மரம் வெட்டும் மனிதனைபல மாதம் பாலை மணலில் விட வேண்டும் !!
மரச்சோலை எங்கும் வரவேண்டும் !
மரம் சாலை எங்கும் நடவேண்டும் !!
நன்றி : http://www.muthukamalam.com